பிறவிக் கடலைக் கடத்துவிப்போனென ஐயமறப் புலப்படும்
உனது தயை உண்டாகுதலே பேறென மக்களுக்கு உண்மையாக ஏன் தோன்றாதோ?
நாத வடிவினனே! கார்முகில் நிகரோனே!
பகலவன் குல அணிகலனே! மென்சொல்லோனே!
அரவரசன் மேற்றுயில்வோனே! மதி பரிதிக் கண்களோனே!
சீதையமர் மடியோனே!
யோகியர் வந்திக்கும் திருவடித் தாமரை இணையோனே!
களங்கமற்றோரின் புகலே!
இச்சை, பேராசை, ஆணவம் ஆகியவற்றை யழித்துக் காக்கும் விருதணிவோனே! தியாகராசன் தொழும் இரகு நாயகா!
பகுத்தறிவற்ற மனைவி மக்களை அனுதினமும் கலந்து,
பிறவிக்கடலை நீந்தவியலாது, அச்சத்தினால் கை சோர்ந்து,
மன்னர்களிடம் (கொடைக்கென) காத்திருந்தும் பயனின்றி, ஆயாசத்தினால் தளர்ந்தனர்;
பலவிதமான உனது மாயையினுள் சிக்கிய தனக்கு இந்த அவதிகளென உணர்ந்து,
உனது தயை உண்டாகுதலே பேறென உண்மையாக ஏன் தோன்றாதோ?
விடியற்காலை யெழுந்து, கருமிகளின் பின்னர் திரிந்து, பிணியுற்று,
தான் கோரிய கோரிக்கைகளைக் கைவிடாது, உடல் கரைந்து,
இன்பங்கள் மற்றும் செல்வத்திற்காக பிற வானோரையும்,
அந்தணர்களையும் வேண்டித் திரிந்து, எந்த புகலுமின்றி,
இச்சுகங்கள் இவ்விதமேயெனத் தனது மனதில் தானறிந்து உனது தயை உண்டாகுதலே பேறென உண்மையாக ஏன் தோன்றாதோ?
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
நீ/ த3ய/ கல்கு3டே/ பா4க்3யமு/-அனி/
உனது/ தயை/ உண்டாகுதலே/ பேறு/ என/ (மக்களுக்கு)
நிஜமுக3னு/-ஏல/ தோசதோ3/
உண்மையாக/ ஏன்/ தோன்றாதோ/
அனுபல்லவி
நாத
3/ ரூப/ நீரத
3/ ஸன்னிப
4/
நாத/ வடிவினனே/ கார்முகில்/ நிகரோனே/
தி
3ன நாத
2/-அன்வய/ பூ
4ஷண/ ம்ரு
2து
3/ பா
4ஷண/ (நீ)
பகலவன்/ குல/ அணிகலனே/ மென்/ சொல்லோனே/
சரணம்
சரணம் 1
அவிவேகுலைன/ தா
3ர/ தனயுலனு/-
பகுத்தறிவற்ற/ மனைவி/ மக்களை/
அனுதி
3னமுனு/ கலஸி/
அனுதினமும்/ கலந்து/
ப
4வ/ ஸாக
3ரமுனு/-ஈத
3/ லேக/
பிறவி/ கடலை/ நீந்த/ இயலாது/
ப
4யமுன/ செய்யி/-அலஸி/
அச்சத்தினால்/ கை/ சோர்ந்து/,
அவனி/-ஈஸு
1ல/ காசி/
புவி/ ஆள்வோரிடம்/ காத்திருந்தும்/
ஸுக
2மு/ லேகனு/-ஆயாஸமு/ ஸொலஸி/
பயன்/ இன்றி/ ஆயாசத்தினால்/ தளர்ந்து/
விவித
4முலகு
3/ நீ/ மாய/ லோபல/
பலவிதமான/ உனது/ மாயையினுள்/
தகி
3லின/ தனகு/-ஈ/-அவது
4லு/-அனு/ தெலிஸி/ (நீ)
சிக்கிய/ தனக்கு/ இந்த/ அவதிகள்/ என/ உணர்ந்து/ உனது...
சரணம் 2
வேக
3/ லேசி/ தானு/-அதி/ லோபி
4 ஜனுல/
விடியற்காலை/ யெழுந்து/ தான்/ மிக்கு/ கருமிகளின்/
வெம்ப
3டி
3கா
3/ திரிகி
3/
பின்னர்/ திரிந்து/
ரோகி
3யை/ தா/ கோரின/ கோர்கெலு/
பிணியுற்று/ தான்/ கோரிய/ கோரிக்கைகளை/
ரோயக/ மேனு/ கரகி
3/
கைவிடாது/ உடல்/ கரைந்து/
போ
4க
3/ பா
4க்
3யமுல கொரகு/-அன்ய/ ஸுருல/
இன்பங்கள்/ செல்வத்திற்காக/ பிற/ வானோரையும்/
பூ
4-ஸுருல/ கோரி/ திரிகி
3/
அந்தணர்களையும்/ வேண்டி/ திரிந்து/
ஏ/ க
3தியு/ லேக/-ஈ/ ஸுக
2ம்பு
3லு/-இட்லு/-அனி/
எந்த/ புகலும்/ இன்றி/ இந்த/ சுகங்கள்/ இவ்விதமே/ என/
தன/ மதி
3னி/ தானு/-எரிகி
3/ (நீ)
தனது/ மனதில்/ தான்/ அறிந்து/ உனது..
சரணம் 3
நாக
3/ நாயக/ ஸ
1யன/-இந்து
3/
அரவு/ அரசன்/ மேற்றுயில்வோனே/ மதி/
தி
3ன நாத
2/ நயன/ ஸீதா/-அங்க/
பரிதி/ கண்களோனே/ சீதை/ யமர் மடியோனே/
யோகி
3/ வந்தி
3த/ பத
3/-அரவிந்த
3/
யோகியர்/ வந்திக்கும்/ திருவடி/ தாமரை/
யுக
3/ ஸ
1ரண/-அகளங்க/
இணையோனே/ புகலே/ களங்கமற்றோர்/
ராக
3/ லோப
4/ மத
3/-ஆது
3ல/ கொட்டி/
இச்சை/ பேராசை/ ஆணவம்/ ஆகியவற்றை/ யழித்து/
ரக்ஷிஞ்சே/ பி
3ருது
3/-அங்க/
காக்கும்/ விருது/ அணிவோனே/
த்யாக
3ராஜ/ பூஜித/ ரகு
4/ நாயக/
தியாகராஜன்/ தொழும்/ இரகு/ நாயகா/
தாரகமு/-அனி/ தெலியு/ நிஸ்
1ஸ
1ங்க/ (நீ)
(பிறவிக் கடலைக்) கடத்துவிப்போன்/ என/ புலப்படும்/ ஐயமற/ உனது..
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - பதா3ரவிந்த3 - பாதா3ரவிந்த3
மேற்கோள்கள்
விளக்கம்
2 - நிஸ்1ஸ1ங்க - ஐயமற்ற - ஐயமற - இச்சொல்லினை இறைவனின் அடைமொழியாகவும் (ஐயமற்றோன்) கொள்ளலாம். ஆனால் இதற்குமுன் வரும் 'தெலியு' (புலப்படும்) என்ற சொல்லினால், இதனை 'ஐயமற' என மொழிபெயர்த்து, பல்லவியுடன் சேர்த்தல் சிறந்ததெனத் தோன்றுகின்றது.
Top